திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.82 திருக்கழுமலம் (சீர்காழி) - திருவிருத்தம்
பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட
    ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின
    என்பர் நளிர்மதியங்
கால்கொண்ட வண்கைச் சடைவிரித்
    தாடுங் கழுமலவர்க்
காளன்றி மற்றுமுண் டோஅந்த
    ணாழி அகலிடமே.
1
கடையார் கொடிநெடு மாடங்க
    ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ்
    சூடி உகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன்
    வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க
    நாடொறும் ஆடுவரே.
2
திரைவாய்ப் பெருங்கடல் முத்தங்
    குவிப்ப முகந்துகொண்டு
நுரைவாய் நுளைச்சிய ரோடிக்
    கழுமலத் துள்ளழுந்தும்
விரைவாய் நறுமலர் சூடிய
    விண்ணவன் றன்னடிக்கே
வரையாப் பரிசிவை நாடொறும்
    நந்தமை யாள்வனவே.
3
விரிக்கும் அரும்பதம் வேதங்க
    ளோதும் விழுமியநூல்
உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர்
    கேட்கில் உலகமுற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள்
    பாடக் கழுமலவன்
நிருத்தம் பழம்படி யாடுங்
    கழல்நம்மை ஆள்வனவே.
4
சிந்தித் தெழுமன மேநினை
    யாமுன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்க
    வல்லானைப் பசுபதியைச்
சந்தித்த கால மறுத்துமென்
    றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழல் நாடொறும்
    நந்தமை ஆள்வனவே.
5
நிலையும் பெருமையும் நீதியுஞ்
    சால அழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ளத் தன்று
    மிதந்தவித் தோணிபுரஞ்
சிலையில் திரிபுரம் மூன்றெரித்
    தார்தங் கழுமலவர்
அலருங் கழலடி நாடொறும்
    நந்தமை ஆள்வனவே.
6
முற்றிக் கிடந்துமுந் நீரின்
    மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படு
    கின்றது சூழரவந்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந்
    துன்றிவெண் திங்கள்சூடுங்
கற்றைச் சடைமுடி யார்க்கிட
    மாய கழுமலமே.
7
உடலம் உயிரும் ஒருவழிச்
    செல்லும் உலகத்துள்ளே
அடையும் உனைவந் தடைந்தார்
    அமரர் அடியிணைக்கீழ்
நடையும் விழவொடு நாடொறும்
    மல்கும் கழுமலத்துள்
விடையன் தனிப்பதம் நாடொறும்
    நந்தமை ஆள்வனவே.
8
பரவைக் கடல்நஞ்ச முண்டது
    மில்லையிப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படு
    கின்றது நீண்டிருவர்
சிரமப் படவந்து சார்ந்தார்
    கழலடி காண்பதற்கே
அரவக் கழலடி நாடொறும்
    நந்தமை ஆள்வனவே.
9
கரையார் கடல்சூழ் இலங்கையர்
    கோன்றன் முடிசிதறத்
தொலையா மலரடி ஊன்றலும்
    உள்ளம் விதிர்விதிர்த்துத்
தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன்
    கழுமலங் காண்பதற்கே
அலையாப் பரிசிவை நாடொறும்
    நந்தமை ஆள்வனவே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.82 திருக்கழுமலம் (சீர்காழி) - திருவிருத்தம்
படையார் மழுவொன்று பற்றிய
    கையன் பதிவினவிற்
கடையார் கொடிநெடு மாடங்க
    ளோங்குங் கழுமலமாம்
மடைவாய்க் குருகினம் பாளை
    விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா
    திருக்கும் பெரும்பதியே.
1
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com